Monday, October 24, 2011

ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!




ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!

-பாடலாசிரியர் அண்ணாமலை பேட்டி


 ரத்தத்தின் ரத்தமே - உடன்பிறப்பே!
’’,   ‘’ஜில்லாக்ஸ்’’ என்று வேலாயுதம் படத்தின் பாடல்கள் எல்லா எஃ.எம்&களிலும் மாறி மாறி ஒலிக்கின்றன.

  இந்த இரண்டு பாடல்களையும் எழுதிய கவிஞர் அண்ணாமலையிடம், அந்தப் பாடல்கள் உருவான விதம் பற்றிக் கேட்டோம்.


‘‘ இதற்கு முன்பு விஜய் சாருக்கு நான் எழுதியஎன் உச்சி மண்டையிலபாடல் பெரிய வெற்றி பெற்றது. எனவே, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சார் இந்தஜில்லாக்ஸ்பாடலை என்னிடம் எழுதக் கொடுத்தபோதே, ‘உச்சி மண்டை பாடல் அளவுக்கு இதுவும் ஹிட் ஆகவேண்டும்.  வித்தியாசமாக எழுதுங்கள்!’ என்றார்.



விஜய்க்கு ஹன்சிகா துலானி மயக்க மருந்து கலந்து கொடுப்பார். அதைக் குடித்ததும் விஜய் அரை மயக்கத்தில் ஹன்சிகாவைப் பார்த்துப் பாடத் தொடங்குவார். நெத்தியடியானகுத்துப் பாடலாக இது வரவேண்டும்!’ என்று இயக்குநர் ராஜா சார், இந்தப் பாடலின் சூழலை என்னிடம் விளக்கினார்.

my blog recent