Monday, October 17, 2011

எப்போதோ படித்தது

எப்போதோ படித்தது



படிக்காதவன்
ரயிலில் 
திருடுவான்.
படித்தவன்
ரயிலையே
திருடுவான்.




ஒரு நல்ல சொற்பொழிவுக்கு
நல்ல ஆரம்பம் இருக்க வேண்டும்
நல்ல முடிவு இருக்க வேண்டும்
இரண்டுக்கும் உள்ள இடைவெளி
குறைவாக இருக்க வேண்டும்




 ஒரு தவளைக்கு எது அழகாக
தோண்ற முடியும். துருத்திக்
கொண்டுள்ள கண்கள், அகன்ற
வாய், மஞ்சள் நிற தொப்பை,
புள்ளியுள்ள முதுகு இவற்றை
கொண்ட பெண் தவளை தானே!




தேவைகள் 
தான் புதிய 
கண்டுபிடிப்புகளுக்கு
தாய் என்றால் 
அப்பா 
என்ன செய்து 
கொண்டிருக்கிறார்?.





 இன்றைய பிரச்சனைகளுக்கு
நேற்றைய பதில்களை
சொல்வது தான்
அரசியல்


  
மனிதன் மதத்திற்காக சண்டை     
போடுவான்,அதைப்பற்றி 
எழுதுவான், பேசுவான்.
உயிரையும் விடுவான். 
ஆனால்
அதன்படி வாழ மாட்டான்.









வாய்ப்புகளில் உள்ள பிரச்சனைகளை
பார்ப்பவன் 
தோற்கிறான்.
பிரச்சனைகளில் உள்ள
வாய்ப்புகளை 
பார்ப்பவன்
ஜெயிக்கிறான்.






No comments:

Post a Comment

my blog recent