Monday, October 17, 2011

ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்



                                                                ஒவ்வொரு தடவை தேர்தல் வரும் போது
எல்லாம் இந்த சந்தேகமும் எனக்கு வந்துகிட்டே இருக்கு. ஓட்டு
போடுவதற்கு ஒரு நாள் முன்னாடி பிரசாரத்தை நிப்பாட்டனும்னு  சட்டம் போட்டு விடுகிறார்கள் ஆனால் அதற்கு அப்புறமும் எல்லா சானல்களிலும் நியூஸ் காட்டுகிறேன் பேர்வழி என்று பிரசாரம் செய்ததை காட்டி கொண்டே இருக்கிறார்கள்.  இது எந்த கணக்கில் வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை டி.வி.,பேப்பர் எல்லாம் மீடியா கிடையாது என்று தேர்தல் கமிஷன் நினைக்கிறதோ என்னமோ? 

                          யாராச்சும் விளக்குங்களேன்.



                                             ஓட்டு போட போகனும் விடுங்கப்பா !



                                                          இதே கணக்கு தான் டாஸ்மாக் கடைகளுக்கும்.
ஒட்டுப்பதிவின் போது எல்லா ஒயின்ஸாப்பிற்கும் லீவு விட்டு விடுகிறார்கள். மற்ற நாட்களில் எப்படி வேண்டுமானால் குடித்து சாவுங்கள்,  ஓட்டு போடும் நாளில் மட்டும் தெளிவாக இருங்கள் என்று சொல்கிறார்களா? இல்லை நம் மக்கள் மட்டையாகி ஓட்டு போட யாரும் வரமாட்டார்கள் என்று கடையை மூடி விடுகிறார்களா?

            யாராச்சும் விளக்குங்களேன்.

 
 இது ஆப்படிக்க !




இது ஆப் அடிக்க !!



டிஸ்கி:

                  தேர்தல் நடைமுறை அறிவித்த பின்னர் எந்த ஒரு சலுகையோ,
திட்டமோ அறிவிக்கக்கூடாது என்று சொல்வாங்க. ஆனால் முதல்வர்
போனஸ் அறிவிச்சிருக்காங்களே. அது எப்படினு விளக்கமெல்லாம்
கேட்க மாட்டேன். கேட்டாலும் வாயா திறக்கப் போறீங்க!

No comments:

Post a Comment

my blog recent