Saturday, December 31, 2011

பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)

2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.

தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.

'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.


டிவிட்டர் இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :

* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.

* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

* ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !

* ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)

* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

* ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.

* இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.

* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.

* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!

* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.

* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.

* பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.

* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!

* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.

* தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.

* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.

* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!

* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!

ஒரே நாளில் 13… ஆனால் பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!


       இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.
இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 13 படங்கள்:
1. மதுவும் மைதிலியும்
2. பாவி
3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்
4. பதினெட்டான்குடி
5. வினாயகா
6. மகான் கணக்கு
7. வழிவிடு கண்ணே வழிவிடு
8. அபாயம்
9. வேட்டையாடு
10. மகாராஜா
இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.
இவை தவிர, ‘வேட்டை நாயகன்,’ ‘ஸ்பீட்-2,’ ‘புயல் வீரன்’ ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.
ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:
நண்பன்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.
வேட்டை
ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.
தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

ஹி்ட்டாகும் ஹிந்தி மொழி மாற்றுத் திரைப்படங்கள்


     தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் திரைப்படங்களை பொழிமாற்றம் செய்வது ஹிந்தி திரையுலகில் தற்போது அதிகரித்துள்ளது.
பிறமொழியில் வெளியாகும் படங்களை வேறு மொழியில் மொழிமாற்றம் செய்வது இயல்பான ஒன்றுதான். பொதுவாக 90 சதவிகித கன்னடப் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிமாற்றப் படங்களாக இருக்கின்றன. இதே சூத்திரம் இந்தி சினிமாவிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் வெற்றியடைந்ததால், இந்த ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது.
தமிழில் நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா நடிப்பில் வெற்றியடைந்த சிங்கம் திரைப்படம் அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான வசூல் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல காவலன் படம் சல்மான் நடிப்பில் பாடிகார்ட் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதே போல ஏழு படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட உத்தமபுத்திரன் இந்தியில் ரெடி என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் கிக் என்றும் தமிழில் தில்லாலங்கடியாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதே போல் ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்ற படம் ஹிந்தியில் ஜெனிலியா நடிப்பில் இட்ஸ் மை லைஃப் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. கார்த்தி நடித்த சிறுத்தை படம் இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்கவுள்ளார்.
இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெற்றியான ‘காக்க காக்க’ படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் ஃபோர்ஸ் என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் வெற்றியான காதல் படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான் இயக்க உள்ளார். இதுதவிர ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி மொழிமாற்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
கமர்சியல் விஷயங்களை தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் வெற்றியாகும் என்று ஹந்தி தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான கஜினி, வான்டட் ஆகிய மொழிமாற்றப்படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட மொழிமாற்றத்திற்கு இந்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Vijay’s Nanban Theatre list


Shankar’s Nanban finally is ready to rock and roll this pongal 2012. Nanban has Ilayathalapathy Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj and S J Surya in the lead roles.

The huge theatre list of Vijay’s Nanban are as follows. This is only the list of Chennai (also many screens are to be added says sources), it seems like Nanban will have a very big opening with maximum number of screens around the world.

The Theatrical Trailer of Nanban can be seen in the following theatres in which the film is to be released.


Sathyam

Santham

தமிழ் சினிமா 2011 - ஒரு சிறப்பு பார்வை!




தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :

காவலன் : 'பாடிகார்ட்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக். கமர்ஷியல் படங்களிலேயே விஜய்யை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன மாற்றம். நீண்ட நாட்கள்.. இல்லை.. நீண்ட மாதங்கள் கழித்து, கமர்ஷியல் மசாலாக்கள் குறைத்து, காமெடி கலந்த வேடத்தில் விஜய் நடித்த படம். பட வெளியீட்டிற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை தாண்டி வெளிவந்து வரவேற்பை பெற்ற படம்.


ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது மத்திய அரசு.

சிறுத்தை : 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். போலீஸ் அதிகாரி, திருடன் என முதன் முறையாக கார்த்தி இருவேடங்களில் நடித்த படம். கார்த்தியின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, வேகமான திரைக்கதை அமைப்பு ஒன்றிணைந்த படம். வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்த படம்.


பயணம் : விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொன்ன திரைக்கதை. ஒரு ஹைஜாக் படத்தில் காமெடியை சரியான இடத்தில் கலந்தது ராதாமோகனின் டச். 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.

குள்ளநரி கூட்டம் : நான்கு இளைஞர்கள் எப்படி போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள் என்ற கதையை நகைச்சுவையுடன் சொன்ன படம். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்த படம். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்குப் பிறகு விஷ்ணுவுக்கு அமைந்த வெற்றிப்படம்.

பொன்னர் சங்கர் : கலைஞரின் வசனம், தியாகராஜன் அருமையான இயக்கத்தில் வெளிவந்தது பொன்னர் சங்கர். கிராபிக்ஸ் காட்சிகளா என்பது தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு என இரண்டுமே அமைந்தது இப்படத்தின் ப்ளஸ். பிரஷாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த படம்.

கோ : கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளியான படம். பத்திரிக்கை புகைப்பட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த படம். கே.வி.ஆனந்த, சுபா என மூவரின் திரைக்கதை அமைப்பு, கே.வி.ஆனந்தின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என மூன்றுமே மக்களிடம் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.

வானம் : ' வேதம்' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். ஐந்து தனித்தனி கதைகள் ஒருகட்டத்தில் எல்லாம் ஒன்றாக இணைய, க்ளைமாக்ஸ் என்ற திரைக்கதை அமைப்பில் வெளிவந்த படம். ஐந்து கதைகளில் ஒரு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தது தான் இப்படத்தின் ஹைலைட்.

அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக வடிவமைத்து சுசீந்திரன் இயக்கிய படம். எதார்த்தமான பாத்திர படைப்புகள், திரைக்கதை அமைப்பு என திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம்.

ஆரண்ய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலை சதிப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’. திரைக்கதை அமைப்பு, ஷார்ப்பான வசனங்கள் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டிய படம். வெளிவரும் முன்னே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்தது. யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, வினோத் ஒளிப்பதிவு என அனைத்து தரப்பினரின் உழைப்பு தான் இப்படத்தின் விருதுகளுக்கு காரணம்.

தெய்வத்திருமகள் : அஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும் என்பதை அழகாக காட்டிய படம். விக்ரமின் நடிப்பு, குழந்தை நட்சத்திரம் சாராவின் மழலை கொஞ்சும் நடிப்பு என தமிழக மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம். ஜி.வி.பிரகாஷ் இசை, இயக்குனரின் விஜய்யின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இவ்விரண்டுமே இப்படத்திற்கு பலமாக அமைந்தது.

காஞ்சனா : தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!. லாரன்ஸ் கதை, திரைக்கதை அமைப்பு, கோவை சரளா காமெடி என மக்களை ரசிக்க வைத்தப் படம். படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!

வெங்காயம் : ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!

மங்காத்தா : கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’! 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!. அஜீத் 50வது படம், அஜீத்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட்பிரபு திரைக்கதை அமைப்பு, யுவனின் இசை என தமிழக மக்களிடம் வரவேற்பையும் கல்லா நிறைய காசையும் அள்ளிக் கொடுத்த படம்.

எங்கேயும் எப்போதும் : எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளாராகவும் ஆனார்.

வாகை சூட வா : மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை! 'களவாணி' சற்குணம் இயக்கி இருந்தார்.

சதுரங்கம் : நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’. கரு.பழனியப்பன் இயக்கத்தில் படம் தயாராகி, பல மாதங்கள் கழித்தே வெளியானது இப்படம்.

வேலாயுதம் : நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்! விஜய் நடிப்பு, ஜெயம் ராஜாவின் திரைக்கதை, விஜய் ஆண்டனி இசை, சந்தானத்தின் காமெடி, என அனைத்து கலந்து மக்களிடன் வரவேற்பை பெற்ற படம்.


ஏழாம் அறிவு : சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி! ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைப்பு, ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவு, சூர்யா மற்றும் JOHNNYயின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே கலந்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம். ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.


மயக்கம் என்ன : காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’! செல்வராகவனின் திரைக்கதை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, தனுஷின் நடிப்பு, ஜி,வி.பிரகாஷின் துள்ளல் மிகுந்த பாடல்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்து இளைஞர்கள் கொண்டாடிய படம்.

பாலை : வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!

போராளி : பகை தீர்க்கத் துரத்தும் மனித விலங்குகளிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் 'போராளி’!. சமுத்திரக்கனியின் திரைக்கதை, சசிக்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பு, கஞ்சாகருப்பு மற்றும் சூரியின் காமெடி என மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.

மெளனகுரு : போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!

my blog recent