மும்பை தாக்குதல் : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்!
மும்பை தாக்குதலின் 3 ஆம்
ஆண்டு நினைவு தினத்தையொட்டி மும்பை நகரம் முழுவதும் இன்று பாதுகாப்பு
ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு
அஞ்சலி செலுத்துவதற்காக நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான்
பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் பல்வேறு இடங்களில்
தாக்குதல் நடத்தினர். மும்பை தாக்குதல் வழக்கில் இந்தியா மட்டும் இல்லாமல்
உலகையே அதிர்ச்சி அடைய செய்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் உடன் பிடிப்பட்ட
ஒரே குற்றவாளி பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை ஐகோர்ட்டும் மரண
தண்டனையை உறுதி செய்தது.