Wednesday, September 14, 2011

நான் பெருமாள் பக்தன் : பொட்டு சுரேஷ்


நான் பெருமாள் பக்தன் : பொட்டு சுரேஷ்

மதுரை: ""நான் ரவுடி கிடையாது. அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். நான் ஒரு பெருமாள் பக்தன்,'' என போலீஸ் காவலில் தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சர் அழகிரியின் நம்பிக்கைக்குரியவர். நிலஅபகரிப்பு, மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். குண்டர் சட்டத்திலும் கைதாகியுள்ள இவரை, வழக்கு ஒன்றில் நேற்று முன் தினம் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்களிடம் அவர் கூறியதாவது : அமைச்சர் அழகிரியிடம் நிர்வாகம் தொடர்பான பணியை மேற்கொண்டேன். நான் ரவுடி கிடையாது. அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளேன். நான் ஒரு பெருமாள் பக்தன். வருமான வரி தாக்கலில், காண்பிக்கப்பட்ட சொத்துக்களை விட எனக்கு கூடுதல் சொத்துக்கள் இருப்பதை நிரூபித்தால் அதை அரசிடம் கொடுத்துவிடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

my blog recent