காதல்,
கன்னத்தில் முத்தமிட்டு
காயுமுன்னே – அதை
தீமூட்டி எரிக்கும்
பாடை தீப்பந்தம்.
காதல்,
ரத்த நாடிகளுக்குள்
பெற்றோலை ஊற்றி
வலது சோணை அறைக்குள்
தீயை போடும்
கேவலமான தீக்குச்சு.
காதலித்துப்பாருங்கள்.
மூளை நோக்கி
ரத்தம் பாய்ச்சும்
மயிர் குழாய்களோ
பாதியில் மரிக்கும்.
மூளை இயங்கும்
மூளி கலங்கும்
முகூர்த்தம் கூட
சனியனாய் தெரியும்.
முதலில் வந்த
மூன்று வருட கணவன்
மூலையில் கிடப்பான்,
இறுதியாய் வந்த
வெளிநாட்டு கனவான்
அவள் கட்டிலில் புரள்வான்.
காதலில்,
கவலைக்கும் கண்ணீருக்கும்
கல்யாணம்,
சந்தோசம் சாகக்கிடக்கும்.
காதலி மேடையில்
காதலன் பாடையில்
அவளுக்கோ அது அர்ச்சனை
இவனுக்கோ அது பிச்சை.
வில்லேற்றியவள் – எப்படியோ
விலைபோவாள்,
வீணாய்போன அம்போ
சுவரில் குற்றியபடி
சுபம் சுபம்….
நீ
எல்லாமே
அவளுக்காய் செய்வாய்,
அவளோ
நீ லூசு என்பாள்
அவள் கடைசி பிரிவில்.
உனது காதலை
உறுதிப்படுத்த நினைப்பாய்,
சந்தர்ப்பம் வரும்
சந்தோசமும் வரும்
ஆனால்
அவளோ அதைப்பார்க்க
பிள்ளையோடு வருவாள்..
காதலித்துப்பாருங்கள்,
பலதடவை,
உண்மை
குப்பையில் இருக்கும்,
பொய்யோ அவள்
கைபை வரை போகும்,
நியாயம் சிலவேளை
நின்மதியற்றுப் புலம்பும்.
நம்
ஆசையோ தூக்கில்
அவள்
ஆணவம் மட்டும்
பேச்சில்..
காதலித்துப்பாருங்கள்,
காதலித்த உங்களை
காதுகிழிய பேசுவாள்,
உங்களை தீர்ப்பிட
ஆயிரம் குற்றவாளிகளை
வக்கீல்கள் ஆக்குவாள்,
அவள்
வாழ ஆசைபட்டு
வாழ்ந்த உங்களை சாகடிப்பாள்.
என்னவோ
இறுதியில்
அவள்
மாங்கல்யத்தோடு இருப்பாள்
நீங்களோ
மண்ணாய் போன
வருடக்கணக்கான காதலோடு
பந்தியில் இருப்பீர்கள்
அவள்
திருமண வீட்டில்
ஒரு பிடி சோற்றுக்காய்..
காப்பி இறுதியில் இனிக்கும்
காதலி இறுதியில் கசக்கும்.
நம்
காதல் பொய் என்றால்
கடவுளும் பொய்.
காரணம்
அன்பே சிவம்.