Tuesday, October 11, 2011

அவளும்... மழையும் ..

அவளும்... மழையும் ..

posted on 11 oct 2011 by ctech52.blogspot.com




                                                                            மேகங்கள் கூடாமல்
          இருக்கின்றன -உன் மேல்
               மழை பொழிய வேண்டும் என்பதற்காக வெளியே வா அன்பே!
      மழை பொழியட்டும்

ஏன் இத்தனை
கூப்பாடு கலவியின் போது
மேகங்களே ? -உடனே
மழை பிள்ளை
பெறுவதாலா!


அன்பே !
உன் மீது விழுவதை
தடுக்கும் குடையின் மீது
அதிக கோபத்தில் உள்ளதோ
மழை!
காற்றுடன் கைகோர்த்து
குடையை புரட்டி போடுகிறதே !




அன்பே !
காரிருள் மேகங்கள்
உன் கூந்தலின்
கரிய நிறத்தை
கண்டு வெட்கப்பட்டு தான்
மழையாய் பொழிகிறதா
இப் பூமியில் ..
மழைக்கான காரணம்
நீ தானா!


மழை மீது
தீராத காதல் ஏற்பட்டது
நீ வாய்
கொப்பளிப்பதை
பார்த்த பின் ...


No comments:

Post a Comment

my blog recent