சினிமாவை விட்டு ஓடிப் போகலாம்னு நினைச்சேன். ஆனால் நல்ல வேளை அப்படி எதுவும் செய்யவில்லை. இப்போது சந்தோஷமாக உள்ளேன்," என்றார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள்.

இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம் மேல் புதிய மரியாதை ஏற்படுகிறது.

நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை இப்போது புரிந்துகொண்டேன். நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்து இருப்பேன்.

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்," என்றார்.