Thursday, October 27, 2011

IF BLOGGER CLOSED!!!


Thursday, October 27, 2011

IF BLOGGER CLOSED!!!

ஒரு வாரத்துக்கு முன்னால கூகுள் பஸ்ஸ (BUZZ)மூடப்போறதா தகவல் வந்தது அந்த நேரத்துல twitter-ள் உலாவிக்கிட்டு இருந்தப்ப iftwitterclosed அப்படின்னு # போட்டு ட்விடிக்கிட்டு இருந்தாங்க.அப்பா அங்கே வந்த நிருபன் கூட அடப்பாவிகளா பிக்குல தான் ரணகளமா ஓடிட்டு இருக்குன்னு இங்கே வந்தா இங்கே அதுக்கு மேல க்ளோஸ் பண்ற அளவுக்கு போட்டு தாக்குராங்களே என்று நொந்தார்!
அந்த நேரத்தில் என் கபாலத்தில் உதித்தது தான் இந்த எண்ணம் .IF BLOGGER CLOSED.என்ன நண்பர்களே அதிர்ச்சியா இருக்கா?சும்மா ஒரு கற்பனை என்ன நடக்கும் பாக்கலாம் வாங்க!
.



J எதை எழுதறது,என்னாத்த எழுதறதுன்னு மண்டைய போட்டு உடைச்சுக்க வேணாம்.அதே மாதிரி எதை வேணும்னாலும் எழுத தோணாது!

Jபதிவைப்போட்டுட்டு கமெண்ட்ஸ் வந்ததான்னு சும்மா சும்மா பேஜ்-refresh பண்ண தேவையில்ல.

Jசினிமா விமர்சனம் எழுத மொக்க படத்துக்கெல்லாம் போய் சொந்த செலவில சூனியம் வைச்சுக்க வேணாம்!

Jஎந்தெந்த திரட்டிகள்ள இணைக்கலாம் எதெதுல இணைக்கக்கூடாதுன்னு ரூம் போட்டு யோசிக்க அவசியம் இருக்காது!

Jயாராரேல்லாம் மொய் வெச்சிருக்காங்கன்னு பாத்து பாத்து போய் மறு மொய் வைக்க வேணாம்!

Jவீட்டுல இருக்கவங்க அப்படி என்னாதான் அந்த கம்பியூட்டர்ல ஒக்காந்து நோண்டிக்கிட்டு இருக்கியோன்னு கயிவி கயிவி ஊத்துறது நின்னுடும்!

Jநாம ஏதோ எழுதப்போய்நீ எப்படி அப்படி எழுதலாம்னு யார்க்கிட்டையும் வாங்கிக்கட்டிக்க தேவை இருக்காது!

Jஇதப்பத்தி எழுதுனா அவங்க கோச்சுப்பாங்களோ?அதப்பத்தி எழுதுனா இவுங்க கோச்சுப்பாங்களோ அப்படின்னு எல்லாம் நினைக்க தேவையில்லை!

Jராத்திரி பேய் வரவரைக்கும் உக்காந்து கமென்ட் போடத்தேவையில்லை!

Jடாகுடர் படங்களுக்கு விளம்பரம் கொறையும்!

Jஅரசியல் கூத்துக்களை கண்டும் காணாம இருக்க வேண்டிய நிலைமை வரும். ஒருத்தர் காத பொத்திக்கிட்டு இருக்கற மாதிரி.

Jஆபீசுல பிளாக் பாக்குறது கொறைஞ்சு கொஞ்சம் வேலை நடக்கும்.

Jகையில மொபைல வைச்சுக்கிட்டு post super-அப்படின்னு சொல்லத்தேவையில்ல!

Jநம் எண்ணங்களை,சிந்தனைகளை தூண்டும் நட்புகள்,தொலைதூர,கடல்கடந்த நேசமிகு உறவுகள் கிடைக்காமல் போகும்!

Jயாரோ கொடுக்குற ரேங்கிங் க்கு நட்புகளுக்குள் பனிப்போர் தேவை இருக்காது

Jநேர்ப்பதிவு,எதிர்ப்பதிவு,தொடர்ப்பதிவு,சைடு பதிவுக்கேல்லாம் வாய்ப்பிருக்காது!

Jகலைஞர்,அம்மா,ராசா,கனிமொழி இவங்களைப்பத்தின நையாண்டிகள் கொறையும்.

Jஹன்சிகாவுக்கு © யாருன்னு சண்டை வராது.

Jஒரு பதிவர் சந்திப்பு அதுக்கு நாலைஞ்சு பதிவு போடத்தேவையில்ல.

JLast but not least இந்த பதிவே போட்டிருக்கத்தேவையில்ல!


டிஸ்கி1 - இந்த பதிவு ஒரு கற்பனையே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல(இப்பல்லாம் இப்படி போட்டாலும் பிரச்சினையாகுது பாவங்க நாங்க எப்படிங்க கற்பனை பண்றது!)


டிஸ்கி2- உங்க கற்பனைகளையும் பின்னூட்டத்துல சொல்லுங்க!


No comments:

Post a Comment

my blog recent